ரஜினி, கமலை பற்றி வதந்திகளை பரப்பாதீர்கள்- நடிகர் விஷால் காட்டம்

 

ரஜினி, கமலை பற்றி வதந்திகளை பரப்பாதீர்கள்- நடிகர் விஷால் காட்டம்

ரஜினி கமல் அதிகாரபூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும்வரை அதை வதந்தியாக யாருக்கும் பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

ரஜினி கமல் அதிகாரபூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும்வரை அதை வதந்தியாக யாருக்கும் பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

நடிகர் சங்கத்தின் நிலம் முறைகேடு வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி நடிகர் விஷால் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், “அனைத்து துறைகள் போலவே சினிமாவிலும் வெற்றி, தோல்வி உள்ளது. இது வியாபாரம் என்பதனால் வெற்றி, தோல்வி கடுமையாக இருக்கும். நடிகர் சங்க தேர்தலி 

ரஜினி, கமல் அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும்வரை அதை வதந்தியாக யாருக்கும் பரப்ப வேண்டாம் 
நடிகர் சங்க தேர்தல் எப்போது நடந்தாலும் எதிரணி என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு அணியும் என்ன செய்திருக்கிறோம் என்பதை மற்ற நடிகர்களிடம் சொல்வது கட்டாயமாக இருக்கும். அதேபோன்று நாங்கள் என்ன செய்து இருக்கிறோம் என்பதையும் மற்ற  நடிகர்களிடம் பகிர்ந்து உள்ளோம். அதன் அடிப்படையில்  சக நடிகர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 

மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் தடையாக வந்து அமைகிறது, அதில் ஏதேனும் ஒரு குறையைக் கண்டுபிடித்து அதற்காக தடை விதிக்கிறார்கள். அதையும் தாண்டி இந்த நடிகர் சங்க  கட்டிடத்தை கட்டுவது எந்த விதிமீறலும் இல்லை என்பதை நிருபித்து அதை நீதிமன்றத்தின் வாயிலாக வெளிக்கொண்டு வரும் பொழுது காலதாமதம் ஏற்படுகிறது. நிச்சயமாக இந்த வருடம் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெறும்” என தெரிவித்தார்.