ரஜினி இல்லாமல் உருவாகும் சந்திரமுகி 2! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
கடந்த 2005 ஆம் ஆண்டு சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். காமெடியிலும், த்ரில்லரிலும், இசையிலும் புதிய மைல்கல்லைப் படைத்த இந்த படம் சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனைப்படைத்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். காமெடியிலும், த்ரில்லரிலும், இசையிலும் புதிய மைல்கல்லைப் படைத்த இந்த படம் சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனைப்படைத்தது.
1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனைப்படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 14 ஆண்டுகள் கழித்து உருவாகவுள்ளது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஏ.ஆர். முருகதாஸ்.
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ், சந்திரமுகி இரண்டாம் பாகத்தை உருவாக்கவேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் “சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கனவே கன்னடத்தில், ‘ஆப்த ரட்சகா’ என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்த படம், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. தற்போது இந்த கதையை மேலும் மெருகேற்றி, ஒரு தமிழ் ஹீரோவிடமும் ஒரு பெரிய பட நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். விரைவில் ‘சந்திரமுகி-2’ சூட்டிங் ஆரம்பம்.” என இயக்குநர் பி. வாசு கூறிகிறார். ஒரு ஹீரோவிடம் என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர அவர், ரஜினி என கூறவில்லை. ரஜினி இல்லாமல் சந்திரமுகி 2 உருவாவது அவரது ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளாது.