ரஜினி அரசியலுக்கு வருவாரான்னு அவருக்கே தெரியாது : நடிகர் வடிவேலு பேட்டி!

 

ரஜினி அரசியலுக்கு வருவாரான்னு அவருக்கே தெரியாது : நடிகர் வடிவேலு பேட்டி!

பொத்தாம் பொதுவாகப் பேசிவிட்டு செய்தியாளர்களின் கேள்வி நேரத்துக்கு கூட இடம் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று கேள்வி எழுந்து வந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதில் எல்லாரும் அவர் கட்சியைப் பற்றித் தான் அறிவிக்கப் போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், பொத்தாம் பொதுவாகப் பேசிவிட்டு செய்தியாளர்களின் கேள்வி நேரத்துக்கு கூட இடம் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இது குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்தன. 

ttn

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, கோவிலில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் தரிசனம் செய்தேன். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. ஏன் அவருக்கே அது தெரியாது. அவர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு வரவேற்க தக்கத்து என்றும் கூறினார். 

ttn

தொடர்ந்து, அடுத்த 2021 எலெக்சனில் நான் தான் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதாக இருந்தேன், அதனைச் சிலர் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார். மேலும், நான் சி.எம் பதவிக்கு நின்னா எனக்கு ஓட்டு போடுவீங்க தானே என்று கேட்ட வடிவேலு, அப்போ நான் தான் அடுத்த சி.எம் என்று அவர் ஸ்டைலில் கூறினார்.