ரஜினியை வைத்து படம் இயக்கியது நிலவில் இறங்கி சாப்பிட்டது போல் உள்ளது – ஏ.ஆர். முருகதாஸ்

 

ரஜினியை வைத்து படம் இயக்கியது நிலவில் இறங்கி சாப்பிட்டது போல் உள்ளது – ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

ar murugadoss

இந்நிலையில் இன்று நடைபெறும் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். இங்கு இருப்பவர்களை விட அதிகமான ரசிகன். ரஜினி சாரை வைத்து படம் இயக்கியது நிலாவில் இறங்கி சப்பிட்டது போல் உள்ளது, ரஜினிகாந்தின் சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது. ஹிந்தி தமிழ் என அனைத்து நடிகர்களிடமும் இருக்கும்.எ ம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ரஜினிக்கும் அவருக்கும் சம்மந்தம் இருக்காது. ஆனால் ரஜினிக்கு பிறகு இருக்கும் நடிகர்களிடமும் அவரின் சாயல் இருக்கும்” எனக்கூறினார்.