ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்தாரா எம்ஜிஆர்? உண்மையை உடைத்த மெய்காப்பாளர்!

 

ரஜினியை ராமாவரம் தோட்டத்தில்  வைத்து அடித்தாரா எம்ஜிஆர்? உண்மையை உடைத்த மெய்காப்பாளர்!

ஒரு பெண்ணை சீண்டிய தொண்டரை தான்  எம்ஜிஆர் அடித்தார்’ என்று என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மறைந்த முன்னாள்  முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் 1979 ஆம் ஆண்டு நடிகை லதா விவகாரத்தில் ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இதிலுள்ள உண்மையை முதன்முறையாக கூறியுள்ளார் எம்ஜிஆரிடம் 40ஆண்டுகளாக மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன்.

ttn

 இதுகுறித்து கூறியுள்ள அவர், கடந்த 1979 ஆம் ஆண்டு ரஜினியை எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து அடித்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது.

ttn

அதே சமயம்  கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் ஒரு பெண்ணை சீண்டிய தொண்டரை தான்  எம்ஜிஆர் அடித்தார்’ என்று என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

tttn

இதை கேட்டு உற்சாகமடைந்த ரஜினி  ரசிகர்கள், தலைவர் அரசியலுக்கு வருவதால் இதுபோன்ற வதந்திகளை மீண்டும் மீண்டும் சிலர் பரப்பி வருவதாக கூறி வருகின்றனர்.  .