ரஜினியை பார்த்து ‘யார் நீங்க’ என்று கேட்ட இளைஞர் கைது: உண்மை நிலவரம் என்ன?
துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காண சென்ற நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்த்து, நீங்க யார் என கேட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காண சென்ற நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்த்து, நீங்க யார் என கேட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்ராஜ் என்பவர் “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இந்த காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.
நான் கேட்ட கேள்வியை ஊடகமும், மீம்ஸ் கிரியேட்டர்களும் வேறு மாதிரி திசை திருப்பி விட்டார்கள்…
வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்த “யார் நீங்க சந்தோஷ்”… pic.twitter.com/f4X0erndb7
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 1, 2018
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கல்லூரியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான துண்டறிக்கை கொடுத்ததாக சந்தோஷ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து பண்டாரம்பட்டி மக்கள், கோயில் முன் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.