ரஜினியின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்! – திருப்பூர் நகர செயலாளர் பேட்டி

 

ரஜினியின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்! – திருப்பூர் நகர செயலாளர் பேட்டி

இன்று காலை அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதில் முதல்வர் பதவிக்கு வருவது பற்றி தான் யோசித்ததே இல்லை, சட்டப்பேரவையில் அமர்ந்து பதில் சொல்வது எல்லாம் என்னால் முடியாது. கட்சி வேறு, ஆட்சி வேறாக இருக்க வேண்டும். படித்த, திறமைசாலியை முதல்வராகத் தேர்வு செய்வோம்.

நடிகர் ரஜினிகாந்த்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று திருப்பூர் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதில் முதல்வர் பதவிக்கு வருவது பற்றி தான் யோசித்ததே இல்லை, சட்டப்பேரவையில் அமர்ந்து பதில் சொல்வது எல்லாம் என்னால் முடியாது. கட்சி வேறு, ஆட்சி வேறாக இருக்க வேண்டும். படித்த, திறமைசாலியை முதல்வராகத் தேர்வு செய்வோம். தலைவரின் உத்தரவுக்கு கட்டுப்படுபவர்கள்தான் உண்மையான தொண்டர்கள்” என்று கூறியிருந்தார்.

rmm-tiruppur

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்து தமிழக முதல்வராவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் ரஜினியின் வாக்குக்கு கட்டுப்படுவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
திருப்பூர் நகர ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ரவிக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ரஜினிகாந்த் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் உறுதுணையாக இருப்போம். அவரது கருத்துக்களைத் துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சியை அமைக்கும் இடத்தில் ரஜினி உள்ளார். அவருக்கு திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் ஆதரவளித்து பணியாற்றும்” என்றார்.