ரஜினியின் ஜாதகம் என்ன சொல்கிறது? பிரபல ஜோதிடர் கருத்து! 

 

ரஜினியின் ஜாதகம் என்ன சொல்கிறது? பிரபல ஜோதிடர் கருத்து! 

ரஜினியி ஜாதகத்தினை பற்றி பிரபல ஜோதிடர் கூறியுள்ள ஜோதிட ரீதியான விளக்கங்களை பற்றி விரிவாக பார்போம்.

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தினை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அவரது 69 வது பிறந்த நாளினை அவரது  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

rajini

பல்வேறு ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தினை வைத்து அவர் அரசியலுக்கு வருவாரா,இல்லையா, என்பதினை பற்றி தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். 

 ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படி அரசியல் கட்சி தொடங்கினால் அவரால் ஜொலிக்க முடியாது என்றும்  ஒட்டுமொத்தமாக பல்வேறு ஜோதிடர்கள் கூறி வரும் நிலையில்,

ஜோதிடர் ஷெல்வி மட்டும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் அரசியலில் மிகப்பெரும் சக்தியாக அவர் விளங்குவார் என்றும் உறுதியாக தெரிவித்து வருகிறார். 

rajini

ஜாதகப்படி ரஜினியின் கிரக நிலைகள் எப்படி இருக்கிறது என்று ஜோதிடர் ஷெல்வி கணித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர் கூறிய சில கருத்துகளை பற்றி பார்போம்.

ரஜினியின் ஜாதகப்படி அவருக்கு சனி திசை முடிந்து புதன் திசை தொடங்கியுள்ளது. யார் தடுத்தாலும் அவர் இந்த முறை தனியாகத் தான் அரசியலுக்கு வருவார்.

rajini

சொந்த பணத்தில் தான் கட்சி அமைத்து அரசியலுக்கு வருவார் என்றும்,அரசியலில் பல்வேறு விஷயங்களில் அவர் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அரசியலில் வெற்றிக்கொடி நாட்டுவார் என்பது தான் அவருடைய ஜாதக அமைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

rajini

புதன் திசையில் அவர் கவனமாக இருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்தில் மட்டும் தானே தவிர மற்ற அனைத்து விசயங்களிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் தேசிய அரசியல் அனைத்துமே பரபரப்பாக காணக்கூடிய ஜாதகக்காரர் தான் ரஜினிகாந்த் என்றும் அரசியலில் தனித்துவமாக இருப்பார் என்றும் ஜாதகப்படி அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய காலக்கட்டம் இது என்றும் ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார் .

ரஜினியின் வெற்றியை இந்த காலகட்டத்தில் யாராலும் தடுக்க முடியாது என்பது தான் ஜாதக ரீதியில் தெரிய வருபவை என்று ஷெல்வி கூறியுள்ளார்.