ரஜினியின் கருத்துக்கு ஜோதிமணி எம்.பி பதிலடி!

 

ரஜினியின் கருத்துக்கு ஜோதிமணி எம்.பி பதிலடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்துவரும் போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்துக்கு கரூர் எம்.பி ஜோதிமணி பதிலடி அளித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்துவரும் போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்துக்கு கரூர் எம்.பி ஜோதிமணி பதிலடி அளித்துள்ளார்.

tt

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பான மனநிலை உள்ளது. பலரும் இந்த சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமலிருந்தார். நேற்று ஒரு வழியாக கருத்தை பதிவு செய்திருந்தார்.
அதில், “எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று கூறியிருந்தார்.

 

ரஜினியின் கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வயதானவர்கள், வசதியானவர்களை பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு போராட வாருங்கள் என்று கிண்டல் செய்திருந்தார். 
கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது. மக்களின் அடையாளங்கள், உரிமைகள், உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும், மாணவர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையும் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல! அச்சு அசல் பிஜேபி கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி?!” என்று சூடான கேள்வியை எழுப்பியுள்ளார்.