ரஜினியால் அதிமுக வாக்குகளுக்கு பாதிப்பில்லை: அடித்து சொல்லும் ஜெயக்குமார்!

 

ரஜினியால் அதிமுக வாக்குகளுக்கு பாதிப்பில்லை: அடித்து சொல்லும் ஜெயக்குமார்!

நடிகர் ரஜினியால் அதிமுகவின் வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் ரஜினியால் அதிமுகவின் வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தான் அரசியலுக்கு வருவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்துள்ள ரஜினி, அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதிமுகவின் வாக்குகளை பிரிக்க முடியாது. திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வாக்குகளை தான் அவர் பிரிப்பார். நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினி தொலைக்காட்சி தொடங்கினால் திமுக-வுக்குத்தான் பாதிப்பு என்றும் கணினி தகவல்கள் கண்காணிப்பு என்பது கொலைகாரன் கையில் இருக்கும் கத்திபோல் மாறிவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.