ரஜினிக்கு முட்டு கொடுக்கும் தமிழிசை சவுந்தரராஜன்

 

ரஜினிக்கு முட்டு கொடுக்கும் தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் ரஜினிகாந்த்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் 7 பேர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் 7 பேர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, ரஜினிகாந்த் அதற்கு, எந்த 7 பேர் எனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.  ரஜினிகாந்த்தின் இந்த பேச்ச பெரும் விவாதமாகி இருக்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ரஜினியிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டு இருக்க வேண்டும். ரஜினியிடம் மீண்டும் கேள்வி கேட்டு இருந்தால் வேறு பதில் வந்திருக்கும். ரஜினி சரியாக கேள்வியை உள்வாங்கி இருக்க மாட்டார். அவருக்கு கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்திருக்காது என்றார்.

இந்தியாவே அறிந்திருக்கும் அந்த 7 பேரை தனக்கு தெரியாது என ரஜினி கூறியதற்கு, அவர் கேள்வியை சரியாக உள்வாங்கி இருக்கமாட்டார் என தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் பாஜகவின் அரவணைப்பில்தான் ரஜினி இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதை தடுக்க முடியவில்லை என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

மேலும், அரசியலுக்கு வர இருக்கும் ஒருவர் செய்தியாளர்கள் கேட்கும் கேள்வியை சரியாக உள்வாங்க வேண்டும்,. அப்படி இல்லை என்றால், கேள்வியையே ஒழுங்காக உள்வாங்காத ஒருவர் எப்படி மக்கள் பிரச்னைகளை உள்வாங்குவார் எனவும், ரஜினிக்கு தமிழிசை சவுந்தரராஜன் முட்டு கொடுப்பதை நிறுத்திவிட்டு தவறை திருத்த சொல்ல வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.