ரஜினிக்காக பிரசாரத்தில் குதித்த நடிகர்; பாதையைப் பலப்படுத்தப் போகிறாராம்!

 

ரஜினிக்காக பிரசாரத்தில் குதித்த நடிகர்; பாதையைப் பலப்படுத்தப் போகிறாராம்!

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை ரஜினியின் தீவிர ரசிகன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்பவர். தர்பார் விழாவில் ரஜினியை எதிர்ப்பவர்கள் பற்றிப் பேசி வம்பை விலைகொடுத்து வாங்கினார். 

நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க நடிகர் ராகவா லாரன்ஸ் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை ரஜினியின் தீவிர ரசிகன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்பவர். தர்பார் விழாவில் ரஜினியை எதிர்ப்பவர்கள் பற்றிப் பேசி வம்பை விலைகொடுத்து வாங்கினார். 
இந்த நிலையில், ரஜினிகாந்த் சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துவைத்தார். மக்கள் மத்தியில் மாற்றத்துக்கான விழிப்புணர்வு, புரட்சி வந்தால் கட்சி தொடங்குவதாக கூறினார். மக்கள் மத்தியில் அந்த உணர்வை ஏற்படுத்தும்படி தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கூறினார். 

rajini

ரஜினி என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் விழித்துக்கொண்டிருக்க, நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிக்காக களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் ரஜினியின் பாதையைப் பலப்படுத்துவது என் கடமை, இதற்காக களமிறங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவு: “குரு சேவை: உங்களுக்கு தெரியும்.

Raghava Lawrence

என் தலைவரை போலவே எனக்கும் எந்த தேவையும் கிடையாது. எனக்கு அரசியல் தெரியாது. எந்த கட்சிக்கும் எதிரி கிடையாது. குரு ஒரு வழி காட்டியிருக்கிறார். அவர் வழி நடப்பதும், அந்த பாதையை பலப்படுத்துவதும் என் கடமை. கடமையை நிறைவேற்ற நாளை முதல் களமிறங்குகிறேன். மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும். இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல!”