‘ரஜினிக்காக நான் வாதாட தயார்..அதுவும் இலவசமாக..’ சுப்ரமணிய சுவாமி கருத்து!
நான் கூறவில்லை. ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டுசெல்லப்பட்டது என பலரும் ஊர்ஜித்துள்ளனர்.
துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழாவில் ரஜினி பெரிஐர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து இன்று விளக்கமளித்த ரஜினிகாந்த், ‘1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை. ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டுசெல்லப்பட்டது என பலரும் ஊர்ஜித்துள்ளனர்.
இதுகுறித்து அவுட்லுக் பத்திரிகையில் கூட செய்தி வெளியானது. பத்திரிகைகளில் வந்ததை தான் நான் கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது’ என்றார்.
For a change I am on the side of Rajnikant on the E. V. R. Naicker 1971 rally issue of parading Ram and Sita in a derogatory. This is a fact and Cho had published it in Thuglak. If the cine actor stays firm I will back him in courts if he wants
— Subramanian Swamy (@Swamy39) January 21, 2020
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, ‘1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் பேரணியில் ராமர் மற்றும் சீதையை நிர்வாணமாகக் கொண்டு சென்றது உண்மை. இதனை சோ துக்ளக் இதழில் பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்தில் ரஜினி உறுதியாக இருந்தால் தேவைப்பட்டால், அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்த வழக்கறிஞரையும் வாதாட அழைக்க முடியும், நான் அவருக்காக இலவசமாக வாதாட தயார் என்றும் கூறியுள்ளார்.