ரஜினிகாந்த நலமாக உள்ளார்; வதந்திகளை நம்ப வேண்டாம்: ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்

 

ரஜினிகாந்த நலமாக உள்ளார்; வதந்திகளை நம்ப வேண்டாம்: ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டிலிருந்தே அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டு வந்த ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதையடுத்து, புதிய அரசியல் கட்சி பணிகள், சினிமா ஷூட்டிங் என பரபரப்பாக நடிகர் ரஜினிகாந்த் இயங்கி வருகிறார்.

இதனிடயே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமாக உள்ளது எனவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியானது. இது அவரது ரசிகர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரஜினிகாந்த் நலமாக உள்ளார் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.