ரஜினிகாந்த் குடும்பத்தினர் அத்தி வரதர் தரிசனம்: வைரல் புகைப்படம்! ​ ​

 

ரஜினிகாந்த் குடும்பத்தினர் அத்தி வரதர்  தரிசனம்: வைரல் புகைப்படம்! ​    ​

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர் வைபவத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர் வைபவத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். 

athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக அரசியல் பிரமுகர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என நாள்தோறும் விஐபிக்களின்  விஜயம் அத்தி வரதரை  நோக்கியதாகவே உள்ளது. 

athivaradhar

அந்த வகையில்  நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்   மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா மற்றும் ரஜினியின் பேரக்குழந்தைகள் அத்தி வரதரைத் தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில்  வேகமாக பரவி  வருகிறது. 

latha

இதையடுத்து ரஜினியும் அத்தி வரதரை காண விரைவில் காஞ்சிபுரம் நோக்கி படையெடுப்பார் என்று தெரிகிறது. முன்னதாக நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் வந்து அத்தி வரதரை  தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.