ரஜினிகாந்த்,ஜெயலலிதா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

ரஜினிகாந்த்,ஜெயலலிதா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  இல்லத்திற்கும் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ரஜினி மற்றும் ஜெயலலிதா வீட்டில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார், ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளில் சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால், எந்தவித வெடிபொருளும் சிக்கவில்லை. இது ஒரு பக்கம் நடக்க, மறுபுறம் மிரட்டல் விடுத்த போன்கால் பற்றி போலீசார் விசாரித்து வந்தனர். 

இதனிடையே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கோவையை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் முகமது அலி என்பதும், மன அழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.