ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாரதிராஜா!

 

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாரதிராஜா!

இயக்குனர் பாரதிராஜாவுக்கும் ரஜினிக்குமான நட்பு நாட்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. பதினாறு வயதினிலே தொடங்கி இன்றுவரை இருவரும் நட்பு பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பாரதிராஜா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

மார்ச் 12-ந்தேதி ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிடுவதாகக் கூறியிருந்தார். அதையடுத்து, நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் இளைஞர்கள் எழுச்சி ஏற்பட்டால் தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றார். 

இயக்குனர் பாரதிராஜாவுக்கும் ரஜினிக்குமான நட்பு நாட்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. பதினாறு வயதினிலே தொடங்கி இன்றுவரை இருவரும் நட்பு பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பாரதிராஜா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

bharathiraja-90

பாரதிராஜா அவர்களின் அறிக்கை அப்படியே பின்வருமாறு:

“எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.

தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.

ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல்  அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்” .