ரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்

 

ரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் ரசிகர் போதும் சொல்லியும் போஸ் கொடுத்துள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் சிவகுமார் ரசிகர் போதும் சொல்லியும் போஸ் கொடுத்துள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சிவகுமார். பொதுநலவாதி,அன்பானவர், பொறுமையானவர் என மக்கள் நன்மதிப்பை பெற்ற இவர் சமீபகாலமாக சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கபடும் நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்புவிழாவில் கலந்து கொண்ட சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை  தட்டிவிட்டுவிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதன் வடு இன்னும் மறையாத நிலையில் சமீபத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மீண்டும் செல்போனை  தட்டிவிட்டுவிட்டு சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கபடும் நபராக மாறிவிட்டார்.

இந்நிலையில் சிவகுமார் இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ரசிகர் ஒருவருடன் செல்பியை தாண்டி வீடியோவே எடுத்து கொண்டுள்ளார். இது தொடர்பாக சூர்யா ரசிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், தட்டி விடும் போது திட்டுன யாரும் இப்ப பாராட்டுகிறார்களா ? போதும் சார்னு சொல்ற அளவு செல்பிக்கு போஸ் கொடுக்கறாரு மனுசன்” என்று சிவகுமாருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.