ரசிகர்களை சந்திக்கும் மும்தாஜ்: மும்தாஜ் ஆர்மியால் களைகட்டும் ஏற்பாடு!

 

ரசிகர்களை சந்திக்கும் மும்தாஜ்: மும்தாஜ் ஆர்மியால் களைகட்டும் ஏற்பாடு!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மும்தாஜ் அவரது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மும்தாஜ் அவரது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மமதி, அனந்த் வைத்தியநாதன், மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ரித்விகா உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் 80 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக தங்கியிருந்த மும்தாஜ் கடந்த வாரம் மக்களின் வாக்குகள் மூலம் வெளியேற்றப்பட்டார்.

ஆனால், அவர் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரது செயல்பாடுகள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தன. இதன் வெளிப்பாடாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் `மும்தாஜ் ஆர்மி’ என்ற பக்கத்தை தொடங்கினர். இதன்மூலம்  மும்தாஜ் ரசிகர்களைச் சந்திக்கும் ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து மும்தாஜ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ரசிகர்களை சந்திக்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ரசிகர்கள் அனைவரையும் அவர் வரவேற்றுள்ளார்.