ரசிகர்களுடன் நேர்கொண்ட பார்வை படம் பார்த்த அபிராமி
அபிராமி நேற்று தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்து ரசித்துள்ளார்.
சென்னை: அபிராமி நேற்று தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்து ரசித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வனிதாவின் பேச்சைக் கேட்டு முகனிடம் ஆத்திரத்தில் பேசியது, எந்த நேரமும் அழுது கொண்டே இருப்பது போன்ற செயல்களால் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்.
இந்த நிலையில் வெளியே வந்த அபிராமி தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை நேற்று மாலை சென்று ரசிகர்களுடன் பார்த்துள்ளார். அப்போது அவரின் நடிப்பையும், தல அஜித்தின் நடிப்பையும் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து படம் முடிந்த பிறகு ரசிகர்கள் அவரிடம் வந்து செல்பி எடுக்க விருமிப்பினர். அவர்களின் ஆசைக்காக ஒவ்வொருவரிடம் தனித்தனியாகப் பொறுமையாக அபிராமி செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் ஒரு சிலர் அவரிடம் பிக்பாஸ் அனுபவங்கள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.