ரசிகர்களுடன் உரையாட நடிகர் அருண் விஜய் செய்த காரியத்தை பார்த்திங்களா? 

 

ரசிகர்களுடன் உரையாட நடிகர் அருண் விஜய் செய்த காரியத்தை பார்த்திங்களா? 

நடிகர் அருண் விஜய் ரசிகர்களிடம் உரையாட புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

சென்னை: நடிகர் அருண் விஜய் ரசிகர்களிடம் உரையாட புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடம் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் படமானது. அதையடுத்து பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும் பாக்ஸர் படத்தில் நடிகை ரித்திகா சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார்.

arun vijay

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ரசிகர்களுடன் உரையாட புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதன் மூலம் தான் நடிக்கவிருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், ரசிகர்களுடன் நேரடியாக உரையாடும் நோக்கில் அறிமுகம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த மொபைல் ஆப், தன்னையும், தனது ரசிகர்களையும் இணைக்கும் பாலமாக இருக்கும்’ என்று பதிவு செய்துள்ளார். 

இதையும் படிங்க: பெண்களின் இன்பம் எந்த ஆணையும் சார்ந்து அல்ல; மன வருத்தத்தில் சௌமியா சேத்