ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு எண்ட் கார்ட்; தீபிகா-ரன்வீர் திருமண புகைப்படம் எப்போது?

 

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு எண்ட் கார்ட்; தீபிகா-ரன்வீர் திருமண புகைப்படம் எப்போது?

பாலிவுட் காதல் ஜோடி ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் காதல் ஜோடி ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்தாலியில் இயற்கை எழில் சூழ்ந்த லேக் கோமோ மாளிகையில் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டடு. அதன்படி, கொங்கனி பாரம்பரிய முறையில் நேற்று காலை 7 மணிக்கு இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று சிந்தி முறைப்படி மீண்டும் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒயிட் தீமில் சப்யசாச்சி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஆடையில், தீபிகாவுக்கு பிடித்தமான ஒயிட் லில்லி பூக்களின் அலங்காரத்துடன் லேக் கோமோ மாளிகையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா ரன்வீர் ஜோடியின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமண புகைப்படங்கள் லீக் ஆகாதவாறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

deepika

திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்கள் கூட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. 2 நாட்கள் திருவிழாவாக நடக்கும் இவர்களது திருமணத்தை புகைப்படத்தில் கூட காண முடியவில்லை என ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். நேற்று நடைபெற்ற திருமண புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்து கடுப்பாகிவிட்டனர்.

இந்நிலையில், தீபிகா ரன்வீர் திருமண புகைப்படம் அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 6 மணிக்கு வெளியாக வாய்ப்பிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

deepika

இத்தாலியில் ஆடம்பர திருமணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பும் ரன்வீர்-தீபிகா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவ.21ம் தேதி பெங்களூரிலும், நவ.28ம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது. இதற்கு திரையுலக, விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.