ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்ட விவகாரம்: நடிகர் சிவகுமார் பகிரங்க மன்னிப்பு

 

ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்ட விவகாரம்: நடிகர் சிவகுமார் பகிரங்க மன்னிப்பு

ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்டது தொடர்பாக நடிகர் சிவகுமார் பகிரங்க மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை: ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்டது தொடர்பாக நடிகர் சிவகுமார் பகிரங்க மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகரும், நடிகர்கள் சூர்யா,கார்த்தியின் தந்தையுமான  சிவக்குமார் கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் சிவக்குமாரை காண ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் கூடியிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது, ஆத்திரமடைந்த சிவக்குமார், திடீரென அந்த நபரின் கையில் இருந்த செல்போனை தட்டிவிட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு நடிகர் சிவகுமாரின் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஆர்வமிக்க ரசிகர்கள் அப்படி தான் உணர்ச்சிவயப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் பொது இடங்களில் எப்படி நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்ஃபோனை தட்டிவிட்டது தவறு தான் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் அந்த செயலுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐ அம் சாரி” என மன்னிப்பு கோரியுள்ளார்.