ரசிகரின் குடும்பத்துக்கு உதவிய சூர்யா!
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நள்ளிரவில் சென்று ஆதரவு தெரிவித்து, மகளின் கல்வி உதவியை ஏற்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை: உடல்நலக் குறைவால் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நள்ளிரவில் சென்று ஆதரவு தெரிவித்து, மகளின் கல்வி உதவியை ஏற்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த மணிகண்டன் என்பவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த நவ.13ம் தேதி மரணமடைந்தார். டீக்கடை தொழிலாளியாக இருந்த மணிகண்டனின் குடும்பத்தினரை நள்ளிரவில் சந்தித்த சூர்யா, அவர்களுக்கு ஆறுதல் தெரித்துள்ளார்.
மேலும், மணிகண்டனின் மகள் தேன்மொழியின் கல்விக்கு தேவையான உதவிகளை ஏற்பதாகவும் சூர்யா உறுதியளித்துள்ளார். இது இனி எனது குடும்பம், உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.
#Suriya Anna visited our brother #Selam Fans Club head #Manikantan Anna home yesterday and Consoled his family ? pic.twitter.com/KknOexQ0iW
— SINGAM GUYS NILAMBUR™ (@SingamguysNbr) November 29, 2018
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நள்ளிரவில் சென்று ஆறுதல் கூறினார் நடிகர் விஜய். தற்போது அதே பாணியில் நடிகர் சூர்யாவும் இறந்துபோன தனது ரசிகரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.