ரகசிய கல்யாணமா? வதந்திக்கு நடிகை வரலக்ஷ்மி முற்றுப்புள்ளி!
ரகசியமாக நிச்சயதார்த்த முடிந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சென்னை: ரகசியமாக நிச்சயதார்த்த முடிந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழில் ‘போடா போடி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான வரலக்ஷ்மி சரத்குமார், அடுத்தடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து தன்னை வலுவான கதாநாயகியாக நிலை நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான வலுவான கதாபாத்திரம் ஏற்று நடிப்பதை தனது ஸ்டைலாக வைத்துள்ளார் வரலக்ஷ்மி.
இவரது நடிப்பில் ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, ‘மாரி 2’, ‘நீயா 2’, ‘காட்டேரி’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட அரைடஜன் திரைப்படங்களை வரலக்ஷ்மி தன் கையில் வைத்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமாருக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை பொருட்படுத்தாமல் இருவரும் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மிக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், அவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதனை மறுத்துள்ள வரலக்ஷ்மி தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
Thr r some rumours in the industry that I’m going to get married..I AM NOT ENGAGED N NOT GETTING MARRIED.. thank you to the jobless people who spread these baseless rumours to try n bring me down.. you can’t..I’m here to only work and act..my hard work will never fail..#lovemyjob pic.twitter.com/D5hykw7JM0
— varu sarathkumar (@varusarath) October 6, 2018
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. இப்போதைக்கு திருமணமும் இல்லை. வதந்தி பரப்பியவருகளுக்கு நன்றி. என்னை சிறுமைப்படுத்த உங்களால் முடியாது. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனது கடின உழைப்பு என்றைக்கும் தோற்காது’ என்று வரலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.