‘ரகசிய அறையில் நித்தியாந்தா…ராஜமாதா ரஞ்சிதாவை பிடித்தால் போதும்’ பாலியல் புகார் கொடுத்த ஆண் சீடர் பரபரப்பு பேட்டி!

 

‘ரகசிய அறையில் நித்தியாந்தா…ராஜமாதா ரஞ்சிதாவை பிடித்தால் போதும்’ பாலியல் புகார் கொடுத்த ஆண்  சீடர் பரபரப்பு பேட்டி!

ஆசிரமத்தில் ரகசிய அறை அமைத்து பதுங்கி இருக்கலாம் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நித்தியானந்தாவை வரும்  12ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கர்நாடக அரசு மற்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரைச் சேர்ந்த சீடர் ஒருவர் நித்தியானந்தா, பிடதியில் உள்ள ஆசிரமத்தில் ரகசிய அறை அமைத்து பதுங்கி இருக்கலாம் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ttn

சமீபத்தில் விஜயகுமார் என்கிற விஜி நித்தியானந்தா, நித்தியானந்தா மீது பாலியல் புகார் ஒன்றை கூறினார். அதில், ‘நித்தியானந்தா எனக்கு அவரது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தார். அதில், உன்னை என் சோஷியல் மீடியா பிரிவின் தலைவராக்குகிறேன்.  நீ எனக்கு வேண்டும். எனக்கு நீ சேவை செய்யவேண்டும். நீ   சந்நியாசியாக மாறினால் உன் வாழ்வில் நிறைய மாற்றம் ஏற்படும்’ என்று ஆசை வார்த்தைகள் கூறினார். ஒருகட்டத்தில் நான் உன்னை காதலிக்கிறேன் என்றார் என்று கூறி  அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ttn

தற்போது பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அவர், 2009 ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்குத் தனது தாயுடன் சென்றேன். என் சொத்துக்களை வாங்கிக்கொண்ட நித்தி அதை இருமடங்காக மாற்றுகிறேன் என்று கூறி அதை அபகரித்து கொண்டார். இருபாலின சேர்க்கையாளரான நித்தியானந்தா பார்வதி பரமசிவன் என்று கூறிக்கொண்டு பெண்களை தன்  வசம் வைத்துக்கொள்வார். என்னையும் என் நண்பர்களையும் கூட பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டார். நான் அவரது உருவம் முழுவதையும் என் உடலில் பச்சை குத்தி கொண்டேன்’ என்றார். 

ttn

தொடர்ந்து பேசியுள்ள அவர், நித்தியின் அத்தனை ஆசிரமங்களுக்கும் ராஜமாதாவாக நடிகை ரஞ்சிதா தான். டன்  கணக்கில் தங்க நகைககளை  வைத்துள்ளார். அவர் அசைவின்றி எந்த வேலையும் நடக்காது. முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க அவர் தான் மூளையாகச் செயல்படுவார். அங்குள்ளவர்களின்  என்னை அம்மா என்று அழைக்கக் கூடாது, அக்கா என்று கூப்பிடுங்கள்  என்பார்.  நித்தி கிரீன் மேட் பின்னணியில் வீடியோவில் பேசுவதை வைத்து பார்க்கும் போது இது போன்ற தகவல் தொடர்புக்கான சகல வசதிகளும், அவர் கையில் வைத்திருக்கும் பொருட்களும் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் மட்டுமே உள்ளது. இதனால் ஆசிரமத்தில் உள்ள ரகசிய அறையில் அவர் ஒளிந்திருந்து வெளிநாட்டிற்குத் தப்பி விட்டதாகப் பொய் சொல்கிறார். போலீசார் ரஞ்சிதாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் நித்தியை கண்டுபிடித்து விடலாம்’ என்று கூறி நம்மை யோசிக்கவைக்கிறார்.