யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு மார்ச் 11ம் தேதி வரை காவல்!

 

யெஸ்  வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு மார்ச் 11ம் தேதி வரை காவல்!

அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

யெஸ்  வங்கி வாராக்கடன் பிரச்னையால் பொருளாதார  நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி யெஸ்  வங்கியை தன்வசம் கையகப்படுத்தியுள்ளது. யெஸ் வங்கி  நிறுவனர்  ராணா கபூரின்  மும்பை வீடு மற்றும்  இவரின் மகள்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

 

 இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அவர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மும்பைலுள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

 

அப்போது டி.ஹெச்.எஃப்.எல் நிதி நிறுவனத்தின் 4,450 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு நடவடிக்கை எடுக்காமலிருக்க 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.  அதேபோல் கடக்கும் நிதி நெருக்கடியிலிருந்த நிறுவனங்களுக்கு அதிகளவு கடன் கொடுத்து அதன் மூலம் ஆதாயம் பெற்று வந்ததும் தெரியவந்தது. 

 


 

இதை தொடர்ந்து  ராணா கபூரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.  கடன் கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெறுவதற்காகவே இவர் மகள்கள் பெயரில் போலி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ttn

இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யெஸ்  வங்கி  நிறுவனர் ராணா கபூரை  வரும்  மார்ச் 11ம் தேதி வரை அமலாக்கத்துறையினர் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.