யுவராஜ் சிங் போன்ற வீரர்களை கண்டுபிடிப்பது அரிதானது – சேவாக் புகழாரம்
இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்குடனான தங்களது அனுபவங்களை மூத்த கிரிக்கெட் வீரர்கள் பகிர்ந்து வருகிறார்கள். யுவராஜ் சிங்கின் ஓய்வு குறித்து ட்விட்டரில் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்குடனான தங்களது அனுபவங்களை மூத்த கிரிக்கெட் வீரர்கள் பகிர்ந்து வருகிறார்கள். யுவராஜ் சிங்கின் ஓய்வு குறித்து ட்விட்டரில் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
Players will come and go,but players like @YUVSTRONG12 are very rare to find. Gone through many difficult times but thrashed disease,thrashed bowlers & won hearts. Inspired so many people with his fight & will-power. Wish you the best in life,Yuvi #YuvrajSingh. Best wishes always pic.twitter.com/sUNAoTyNa8
— Virender Sehwag (@virendersehwag) June 10, 2019
‘வீரர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் யுவராஜ் சிங் போன்ற வீரர்களை கண்டுபிடிப்பது அரிதானது. கடினமான காலங்களை அவர் கடந்திருக்கிறார். நோயை விளாசினார், பௌலர்களை விளாசினார்; இதயங்களை வென்றார். மேலும் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுபவராகவும் ஊக்கமளிப்பவராகவும் இருந்துள்ளார்” என வீரேந்திர சேவாக் யுவராஜ் சிங் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
”வரலாற்றில் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர்” என முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.