யாஷிகாவால் ’ப்ரேக் அப்’ ஆன மகத் காதல்?

 

யாஷிகாவால் ’ப்ரேக் அப்’ ஆன மகத் காதல்?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலாமான நடிகர் மகத்தின் காதல் ப்ரேக் அப் ஆனதாக தகவல் வெளியானது

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலாமான நடிகர் மகத்தின் காதல் ப்ரேக் அப் ஆனதாக தகவல் வெளியானது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலாமானவர் நடிகர் மகத் . பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிதான் இவரை பலருக்கும் அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மகத்திற்கு யாஷிகா ஆனந்த, ஐஸ்வர்யா தத்தா இருவரும் நெருக்கமான தோழிகளானார்கள். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே யாஷிகா மகத்தை காதலிப்பதாக சொல்ல, இதை நாசூக்காக தவிர்த்தார் மகத். ஆனால் மறுப்பேதும் சொல்லவில்லை. இதே போல் ஐஸ்வர்யாவும் மகத்தோடு நட்பு காட்டினார்.  

இதனால் வெளியில் இருந்து பார்த்த  மகத்தின் காதலியிடமிருந்து கோபமான ரியாக்ஷன் வந்தது. இதை நிகழ்ச்சிக்கு உள்ளே மகத்திற்கு சொல்லப்பட்டது. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் யாஷிகாவின் நெருக்கதை விடமுடியாமலும் தவித்தார் மகத். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரை  மகத் தன் அருகில் வைத்துக்கொண்டார். 

mahat

அத்துடன் வெளியில் வந்தும் யாஷிகாவின் நட்பை மகத் விடாததால் கோபத்தின் உச்சிக்கே போன மகத்தின் காதலி “இனி நமக்குள் செட் ஆகாது” என்று கூறி பல வருடக்காதலை ப்ரேக் அப் செய்து விட்டதாக  கூறப்படுகிறது. இதன் பிறகுதான் யாஷிகாவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் நடுவராக வலம் ஆரம்பித்திருக்கிறார் மகத்.