யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: நடிகை வரலக்ஷ்மி ஓபன் டாக்! 

 

யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: நடிகை வரலக்ஷ்மி ஓபன் டாக்! 

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். 

சென்னை: நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். 

விமல், வரலக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் கன்னி ராசி. எஸ்.முத்துக்குமாரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாண்டிய ராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் இந்தப் படத்தை தயாரித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. 

அதில் தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குநர் எஸ்.முத்துக்குமாரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது அதில் பேசிய நடிகை வரலட்சுமி, ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது அதனால் படமும் எனர்ஜியாக இருக்கும். 

காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டிய ராஜன் , யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.