யாரைப் பற்றியும் கவலையில்லை.. வெளுத்து வாங்கும் அஜித் பட நடிகை!

 

யாரைப் பற்றியும் கவலையில்லை.. வெளுத்து வாங்கும் அஜித் பட நடிகை!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவைப் போலவே இந்தி திரையுலகில் கெத்தான ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். எந்த விதமான விமர்சனங்கள் வந்தாலும் அதற்காகவெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர்.  சில்க் ஸ்மித்தாவாக ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் அங்கங்களை எல்லாம் அசைத்து வித்யாபாலன் போட்ட கிறங்கடிக்கும் ஆட்டம் இந்தியா முழுவதுமே ரசிகர்களை அள்ளிக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவைப் போலவே இந்தி திரையுலகில் கெத்தான ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். எந்த விதமான விமர்சனங்கள் வந்தாலும் அதற்காகவெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர்.  சில்க் ஸ்மித்தாவாக ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் அங்கங்களை எல்லாம் அசைத்து வித்யாபாலன் போட்ட கிறங்கடிக்கும் ஆட்டம் இந்தியா முழுவதுமே ரசிகர்களை அள்ளிக் கொடுத்தது. ஆரம்ப காலங்களில், முகம் சரியில்லை என்று நிராகரித்து ஒதுக்கிய தமிழ் சினிமா அதன்பிறகு எத்தனையோ வாய்ப்புகளைக் கொடுத்தும், திரும்பி பார்க்காமலேயே இருந்தார் வித்யா பாலன்.  தமிழில் அஜித் மேல் உள்ள மரியாதையால் முதல் முறையாக இறங்கி வந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் மனைவியாக நடித்திருந்தார் வித்யா பாலன். 

vidya balan

தற்போது மனித கணினி என்றழைக்கப்படும் சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.  இது குறித்து ஒரு நேர்காணலில் பேசும் போது, `தி டர்ட்டி பிக்சர், கஹானி ஆகிய படங்களுக்குப் பின் நான் விரும்பும் கதைகளைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அது வேற்று மொழிப்படங்களாக இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் நடிக்கிறேன். அவ்வாறு நான் நடிக்கும் சில கதாபாத்திரங்கள் சிலருக்குப் பிடிக்கலாம். சிலருக்குப் பிடிக்காமலும் போகலாம். என்னுடைய கதாபாத்திரத்தைப் பிடிக்காதவர்கள், என்னை விமர்சனம் செய்வதை நான் கண்டுக் கொள்ளவில்லை.

vidya balan

எல்லோருக்கும் பிடிக்கும் மாதிரியான கேரெக்டர்களில் மட்டுமே ஒரு நடிகை நடிக்க முடியாது. யாரைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். அப்படி என்னையோ, என் கதாபாத்திரங்களையோ வெறுப்பவர்கள் நான் நடித்த படங்களைப் பார்க்க வேண்டாம்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.