யாரும் எளிதில் அணுகக் கூடிய நபர் தோனி – அம்பதி ராயுடு புகழாரம்

 

யாரும் எளிதில் அணுகக் கூடிய நபர் தோனி – அம்பதி ராயுடு புகழாரம்

எந்த வீரரும் எளிதில் அணுகக்கூடிய நபர் தோனி என இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

மும்பை: எந்த வீரரும் எளிதில் அணுகக்கூடிய நபர் தோனி என இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை வரும் 18-ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதற்கு அடுத்த நாளே பரம எதிரியான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

இந்நிலையில், ஆசியக் கோப்பை தொடர் குறித்து அம்பத்தி ராயுடு கூறுகையில் ‘‘விராட் கோலி இல்லாதது உண்மையிலேயே அணிக்கு பெரிய இழப்புதான். இருந்தாலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் திறமையை நாங்கள் பெற்றுள்ளோம். தோனி கேப்டனாக இருந்தவர். எந்தவொரு வீரரும் அணுகக்கூடிய நபராகவே தோனி உள்ளார். எனக்கு அதிக அளவில் அவர் உதவி புரிந்துள்ளார். உலகக்கோப்பை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக வந்துள்ளோம். தற்போது இது மட்டுமே மனதில் உள்ளது’’ என்றார்.