யாருமில்லா திடலில் கம்பு சுற்றுகிறார்கள்: சீமான் அதிரடி

 

யாருமில்லா திடலில் கம்பு சுற்றுகிறார்கள்: சீமான் அதிரடி

ரஜினியும், கமல்ஹாசனும் யாருமில்லா திடலில் கம்பு சுற்றுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை செயலாளர் சீமான் கூறியுள்ளார்.

நெல்லை: ரஜினியும், கமல்ஹாசனும் யாருமில்லா திடலில் கம்பு சுற்றுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை செயலாளர் சீமான் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் வரும்போது அறிவிக்கப்படும் என கூறியிருக்கிறார். இதேபோல் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கும் ரஜினியோ இன்னும் கட்சியே தொடங்காமல் இருந்து வருகிறார். 

இந்நிலையில் இருவரின் அரசியல் பிரவேசம் குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே விஜயகாந்த் கட்சி தொடங்கி வெற்றி பெற்றார். ஆனால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் யாரும் இல்லாத திடலில் கம்பெடுத்து சுழற்றுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, அவர் நடிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். ஆனால் அவர் முதல்வராகவும், தலைவராகவும் இருந்து ஆட்சி செய்வது ஆபத்தானது, அதை நாங்கள் எதிர்ப்போம் என்றார்.