‘யாருக்கும் அஞ்சாத அரசு,. அதிமுக ஆளும் அரசு’ கூட்டத்தொடரில் முதல்வரின் ஆவேசப் பேச்சு !

 

‘யாருக்கும் அஞ்சாத அரசு,. அதிமுக ஆளும் அரசு’ கூட்டத்தொடரில் முதல்வரின் ஆவேசப் பேச்சு !

அதனைக் குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எவ்வாறு பேச வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் உத்தரவு போட முடியாது என்று ஆவேசமாகப் பேசினார். 

மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக துணைத் தலைவர் துரைமுருகன், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பொதுக்கூட்டத்தில் பேசிவதை போலப் பேசினால், திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று பேசுவார்கள் என்று கூறினார். அப்போது அதனைக் குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எவ்வாறு பேச வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் உத்தரவு போட முடியாது என்று ஆவேசமாகப் பேசினார். 

ttn

அதனைத் தொடர்ந்து, ” தங்களை ஆள நினைத்தால் அது ஒரு நாளும் நடக்காது. யாருக்கும் அஞ்சாத அரசு தான், ஆளும் அதிமுக அரசு. மிக முக்கியமான பிரச்சனைகளை எடுத்துக் கூறுவதற்காகவே அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்றும் அதனை எதிர்த்து துப்பாக்கிச் சூடு நடக்கிறது, வன்முறை நடக்கிறது என்று எதிர்க்கட்சி பேசுவது சரியா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை நடக்கவே நடக்காத விஷயத்தை, நடந்ததாக எதிர்க்கட்சி பேசியதால் தான் அமைச்சர் அதற்கு பதிலளித்தார் என்றும் கூறினார்.