மனோஜ் திவாரியை கழட்டி விட்ட பா.ஜ.க…. டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவர் ஆதேஷ் குமார் குப்தா…

 

மனோஜ் திவாரியை கழட்டி விட்ட பா.ஜ.க…. டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவர் ஆதேஷ் குமார் குப்தா…

டெல்லி பா.ஜ.க. தலைவராக இருந்த மனோஜ் திவாரி கடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக கட்சி தலைமையிடம் தெரிவித்தார். ஆனால் பா.ஜ.க. மேலிடம் எதுவும் சொல்லாமல் இருந்து வந்தது. அதேசமயம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை சத்தமில்லாமல் மேற்கொண்டதாக தெரிகிறது.

மனோஜ் திவாரியை கழட்டி விட்ட பா.ஜ.க…. டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவர் ஆதேஷ் குமார் குப்தா…

இந்நிலையில் நேற்று வடக்கு டெல்லி மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் தலைநகரில் மேற்கு படேல் நகரின் கவுன்சிலர் ஆதேஷ் குமார் குப்தாவை டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவராக பா.ஜ.க. மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளர் அருண் சிங், பா.ஜ.க.வின் டெல்லி பிரிவு தலைவராக ஆதேஷ் குமார் குப்தாவை பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா நியமனம் செய்த தகவலை தெரிவித்தார்.

மனோஜ் திவாரியை கழட்டி விட்ட பா.ஜ.க…. டெல்லி பா.ஜ.க.வின் புதிய தலைவர் ஆதேஷ் குமார் குப்தா…

புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஆதேஷ் குமார் குப்தா பேட்டி ஒன்றில், என்னை போன்ற தாழ்மையான ஒரு கட்சி தொண்டனை மாநில கட்சி தலைவராக நியமனம் செய்தற்கு மோடிஜி, நட்டாஜி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். கோவிட்-19 சூழலில், கட்சியின அடித்தளத்தை விரிவுப்படுத்துவதும், ஒருங்கிணைப்பதும் சவாலான விஷயம் என தெரிவித்தார். டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் மனோஜ் திவாரியின் பதவிக் காலமும் இந்த ஆண்டோடு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.