மோடி வந்ததால் தான் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது: இல. கணேசன்

 

மோடி வந்ததால் தான் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது: இல. கணேசன்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் இன்று நடைபெற்றது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் இன்று நடைபெற்றது. வாக்குகள் எண்ணத் துவங்கியதிலிருந்தே அதிமுக இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. அதனையடுத்து, விக்கிரவாண்டியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட நாராயணன் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி விட்டார். 

இல. கணேசன்

இந்நிலையில், அதிமுகவின் வெற்றி குறித்துப் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் இல. கணேசன், தமிழகத்திற்கு மோடி வந்து  மாமல்லபுரத்தில்  இரண்டு நாட்கள் தங்கியதால் தான் அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது என்றும் இரு அதிபர்களின் வருகையையும் எடப்பாடி ஏற்பாடு செய்ததால் தான் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் .