மோடி மற்றும் ராகுலில் யார் பொய்யர் என்பதை முடிவு செய்ய விவாதம் நடத்துமா? பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த காங்கிரஸ் தலைவர்…

 

மோடி மற்றும் ராகுலில் யார் பொய்யர் என்பதை முடிவு செய்ய விவாதம் நடத்துமா? பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த காங்கிரஸ் தலைவர்…

மோடி மற்றும் ராகுலில் யார் பொய்யர் என்பதை முடிவு செய்ய விவாதம் நடத்துமா என காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், ஆர்.எஸ்.எஸ்.ன் பிரதமர் நரேந்திர மோடி பாரத மாதாவிடம் பொய் சொல்கிறார் என பதிவு செய்து இருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடியாக, ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் ராகுல் காந்தி என கிண்டல் செய்து இருந்தார்.

பிரகாஷ் ஜவடேகர்

ஜவடேகரின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், ஜவடேகர் ராகுல் காந்தியை இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என கூறியுள்ளார். நான் கூறுகிறேன் இந்த ஆண்டின் சிறந்த ஜோக்கர் தேசிய ஜனநாயக கூட்டணி. நாட்டின் பொருளாதார நிலவரம், வங்கிகளை பாதிக்கும் வாராக்கடன் நிலவரம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. 

ராகுல் காந்தி

என்.டி.ஏ. (தேசிய ஜனநாயக கூட்டணி) அரசு விரைவில் என்.பி.ஏ.யாக மாறி விடும். மோடி மற்றும் ராகுலில் யார் பொய்யர் என்பதை முடிவு செய்ய ஒரு விவாதம் நடத்த தயாரா என ஜவடேகருக்கு நான் சவால் விடுகிறேன் என தெரிவித்தார்.