மோடி திறந்துவைத்த காந்தி சிலையை சுக்குநூறாக்கிய மர்ம நபர்கள்!

 

மோடி திறந்துவைத்த காந்தி சிலையை சுக்குநூறாக்கிய மர்ம நபர்கள்!

குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்ரேலி மாவட்டத்தில் ஹரிகிருஷ்ணா ஏரியின் கரையில் நிறுவப்பட்டிருந்த சிலையை கடந்த 2017 ஆம் ஆண்டு  பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இதையடுத்து இந்த சிலையை சூரத்தை சேர்ந்த தோலோக்கியா என்ற தொண்டு நிறுவனம் பராமரித்துவந்தது.  

Statue of Mahatma Gandhi

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காந்தியின் சிலை உடைந்து கிடந்துள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் ஒய்.பி. கோஹில், சிலையை உடைத்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.