மோடி கூறிய ஊரடங்கிற்கான 7 வேண்டுகோள் இதோ!

 

மோடி கூறிய ஊரடங்கிற்கான  7 வேண்டுகோள் இதோ!

கொரோனா பாதிப்பு குறையும்  பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சம்விதிமுறைகள் தளர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார். ஊரடங்கு 7 வேண்டுகோள்

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிய இருந்த நிலையில் பிரதம்பர் மோடி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு குறையும்  பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சம்விதிமுறைகள் தளர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில் மோடி தனது உரையில் நாட்டு  மக்கள் கடைபிடிக்க வேண்டிய 7 வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளார். அவை: – 

1. யாரையும் வேலையை விட்டு நீக்காதீர்கள்.

2. உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்துக்கொள்ளுங்கள். 

3. முதியோர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள் 

4. வீட்டில் கூட முகமூடி அணியுங்கள் 

5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகளை பின்பற்றுங்கள் 

6. மே 3 வரை, இப்போது எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள்.

7.தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பளியுங்கள்.