மோடி கதவை திறந்திருந்தாலும் உள்ளே செல்ல யாரும் இல்லை: திருநாவுக்கரசர்

 

மோடி கதவை திறந்திருந்தாலும் உள்ளே செல்ல யாரும் இல்லை: திருநாவுக்கரசர்

பிரதமர் நரேந்திர மோடி கூட்டணிக்கான கதவை திறந்து வைத்திருந்தாலும் உள்ளே செல்ல யாரும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கூட்டணிக்கான கதவை திறந்து வைத்திருந்தாலும் உள்ளே செல்ல யாரும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்ன விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவுடன்  அதிமுக தினகரன் கட்சி கூட்டணி சேர வேண்டும் என்று அச்சுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தம்பிதுரை போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை பாஜகவுக்கு எதிராக கூறி வருகிறார்கள். தினகரனும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டணி கதவு திறந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆனால், பாஜகவில் கூட்டணி வைப்பதற்காக யாரும் இந்த கதவு வழியாக உள்ளே போகவில்லை. போக தயாராகவும் இல்லை. தற்போது பாஜக தனித்து விடப்பட்டுள்ளது என்றார்.