மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் இருக்காது : அதிமுக அமைச்சர் ஆவேச பேச்சு!

 

மோடி கண் அசைத்தால் பாகிஸ்தான் இருக்காது :  அதிமுக அமைச்சர் ஆவேச பேச்சு!

பிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணிநேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்: பிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணிநேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காகத் தமிழகத்தில் அதிமுக-பாமக-பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் அதிமுக – பாமக- பாஜகவினர் மத்தியில் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேநீர் விருந்து, தைலாபுரம் பண்ணை வீட்டில் விருந்து கூட்டணியை அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

modi ttn

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘அதிமுக அமைத்துள்ளது மங்களகரமான கூட்டணி. திமுக அமைத்திருப்பது மங்கிப் போன கூட்டணி. ஒவ்வாத கூட்டணி. அது ஒன்றுக்கும் ஆகாத கூட்டணி’ என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தேசப்பற்றுள்ள மோடி நாட்டின் பிரதமராக வரவேண்டும். பாஜக, அதிமுக, பாமக போன்ற மக்கள் நலக்கூட்டணியை ஆதரியுங்கள். மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தானே இருக்காது. இந்த விஷயத்தில் அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு இளைஞனும் மோடியின் கரத்தை வலுப்படுத்தத் தயாராக உள்ளனர்’ என்றார்.