மோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்! அரசு மருத்துவமனையின் அவலம்!!

 

மோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்! அரசு மருத்துவமனையின் அவலம்!!

மத்திய பிரதேச மாநிலம் சிவ்பூர் என்ற பகுதியில்  உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவர்கள் யாரும் சிகிச்சை அளிக்க வராததால் அவர், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் சிவ்பூர் என்ற பகுதியில்  உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவர்கள் யாரும் சிகிச்சை அளிக்க வராததால் அவர், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவ்பூர் பகுதியை சேர்ந்த 70 வயதான பால சந்திர மோடி. இவர் கடந்த சில நாட்களாக காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அனுமதிக்கப்பட்டு 5 மணி நேரம் ஆகியும் பால சந்திர மோடியை பார்க்க மருத்துவர்கள் வரவில்லை.  இதனால் அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்த பிறகு பக்கத்து வார்ட்டில் இருந்த பிற நோயாளிகள்  மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அப்பவும் மருத்துவர்கள் வராததால், அவரது கண் மற்றும் வாயில் ஈ மொய்த்தது. 

Patient

இந்த சம்பவம் மருத்துவமனையிலிருந்த பிற நோயாளிகளையும் கண்கலங்க வைத்தது. இதுதொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து இதுகுறித்து விசாரணை செய்ய மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.