“மோடி இந்திய பிரதமராக உள்ளவரை அது நடக்க வாய்ப்பில்லை!” – ஷாகித் அப்ரிடி அதிரடி பேச்சு

 

“மோடி இந்திய பிரதமராக உள்ளவரை அது நடக்க வாய்ப்பில்லை!” – ஷாகித் அப்ரிடி அதிரடி பேச்சு

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி இந்திய பிரதமர் மோடி குறித்து அதிரடி கருத்தை கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி இந்திய பிரதமர் மோடி குறித்து அதிரடி கருத்தை கூறியுள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாபாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி எப்போது நடைபெறும் என அப்ரிடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியில் இருக்கும்வரை இந்தியாவிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது எனவும், எதிர்மறை விஷயங்களை சார்ந்தே மோடியின் சிந்தனை இருக்கிறது எனவும் அப்ரிடி பதில் அளித்தார்.

afridi

மேலும் ஒரே ஒரு நபரால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு  சிதைக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்ப்பது இது அல்ல. இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் மற்றவரின் நாட்டுக்கு பயணிக்க விரும்புகின்றனர். ஆனால் மோடி என்ன விரும்புகிறார். அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் மோடி குறித்து ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.