மோடி, அமித் ஷாவுக்கு நன்றி! – வெற்றிக்குப் பிறகு கொண்டாட்டத்தில் எடியூரப்பா

 

மோடி, அமித் ஷாவுக்கு நன்றி! – வெற்றிக்குப் பிறகு கொண்டாட்டத்தில் எடியூரப்பா

கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் நடந்து முடிந்த 15 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. கட்சியை விட்டு விலகி, பா.ஜ.க-வில் இணைந்து மீண்டும் போட்டியிட்டவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றால் அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான டி.கே.சி.சிவக்குமார் கூறியிருந்தார்.

bjb

இந்த நிலையில், இந்த வெற்றிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சி தொடர வாக்களித்த மக்களுக்கும் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.க வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். எடியூரப்பாவின் மகனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் எடியூரப்பா காலில் விழுந்து ஆசி பெற்று செல்கின்றனர்.

yeddurappa

அதே நேரத்தில் ஹான்சுர் தொகுதியில் பா.ஜ.க-வின் விஸ்வநாத்தைவிட 35 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சியின் எச்.மஞ்சுநாத் ஆறுதல் வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.