மோடியை அலறவிட்ட ஆந்திரா: வைரலாகும் புகைப்படங்கள்
பிரதமர் மோடியின் வருகைக்கு பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் ஆந்திர மாநிலமும் தங்கள் எதிர்ப்பை காட்டமாக பதிவு செய்துள்ளனர்
குண்ட்டூர்: பிரதமர் மோடியின் வருகைக்கு பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் ஆந்திர மாநிலமும் தங்கள் எதிர்ப்பை காட்டமாக பதிவு செய்துள்ளனர்.
தமிழகம், கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மோடி எதிர்ப்பில் உறுதியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலமும் தங்கள் எதிர்ப்பை காட்டமாக பதிவு செய்துள்ளது. #gobackmodi, #gobacksadistmodi, #modiamistake உள்ளிட்ட பல்வேறு ஹாஷ்டாக்கில் மோடி எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
Andhra Pradesh politely asking Modi to go back from AP after he has failed to do any good for the state and not granting special status as promised. #GoBackModi pic.twitter.com/F188VJ5YGi
— Gyanesh Pandey (@gyanesh18) February 10, 2019
குண்ட்டூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மோடிக்கு விதவிதமாக போர்டுகள் வைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மோடியின் ஆந்திரா வருகை நம் கருப்பு நாள் என முதல்வர் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், நாம் கருப்பு மற்றும் மஞ்சள் நிற உடை அணிந்தும், பலூன்களை பறக்கவிட்டும், காந்திய வழியில் நம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி ஆந்திர மக்களும் ஆர்ப்பாட்டமின்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.