மோடியைத் தொடர்ந்து ஹரியானா ஆளுநர் – முதல்வருக்கும் குடியுரிமை ஆவணம் இல்லை என்று தகவல்!

 

மோடியைத் தொடர்ந்து ஹரியானா ஆளுநர் – முதல்வருக்கும் குடியுரிமை ஆவணம் இல்லை என்று தகவல்!

குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடிக்கு குடியுரிமை ஆவணம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் இந்தியாவில் பிறந்தார் என்பதால் ஆவணங்கள் தேவை என்ற கேள்வியே எழவில்லை என்று பிரதமர் அலுவலகம் சமாளித்தது.

ஹரியானா முதல்வர் மற்றும் ஆளுநருக்கு குடியுரிமை ஆவணங்கள் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடிக்கு குடியுரிமை ஆவணம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் இந்தியாவில் பிறந்தார் என்பதால் ஆவணங்கள் தேவை என்ற கேள்வியே எழவில்லை என்று பிரதமர் அலுவலகம் சமாளித்தது.
ஹரியானா ஆளுநர், முதல்வர், அமைச்சர்களுக்கு குடியுரிமை ஆவணங்கள் உள்ளதா என்று கபூர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார். இதற்கு ஹரியானா மாநில தலைமைச் செயலகம் பதில் அளித்துள்ளது. அதில், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரின் குடியுரிமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. முதல்வர், ஆளுநரின் ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் இருக்கலாம். அங்கு தொடர்புகொண்டு கேளுங்கள்” என்று கூறியுள்ளனர்.