மோடியே நினைச்சாலும் தமிழர் நாட்டில் பாஜக திட்டம் வெற்றி பெறாது … கொந்தளிப்பில் வன்னி அரசு

 

மோடியே நினைச்சாலும் தமிழர் நாட்டில் பாஜக திட்டம் வெற்றி பெறாது … கொந்தளிப்பில் வன்னி அரசு

அதிமுகவின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்களை குருமூர்த்தி முன்வைக்கிறார். அதில் முக்கியமானவை, அதிமுகவின் ஊழல், ஒற்றுமையின்மை

ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதைப் போலவே ‘சோ’வுக்கு பிறகு பத்திரிக்கை உலகிலும், சீரியஸ் அரசியலை நையாண்டி செய்து கருத்து சொல்பவர்கள் என யாருமே எடுபடவில்லை. அதிலும், துக்ளக் பத்திரிக்கையில் குருமூர்த்தி எழுதும் தலையங்கங்கள் எல்லாம், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை’ ரகம் தான்.

இந்த வார துக்ளக்கில் 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்’ என்று தலையங்கம் எழுதியிருப்பது பரவலாக கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன்னி அரசு, ‘குருமூர்த்தி வகையறாக்களுக்கு அப்படி என்ன அக்கறை?’ என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‘ஆடு நனைகிறதே என்று  ஓநாய் அழுத கதையாக  துக்ளக் குருமூர்த்தி அழுகை இருக்கிறது. இந்த வார துக்ளக்கில் அதிமுக மீது அக்கறை கொள்வது போல சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று தலையங்கம் எழுதியிருக்கிறார். மன்னர்களுக்கு ஆலோசனை சொல்லுகிற அன்றைய பாரம்பரியத்தொழிலை  இன்றைக்கும் குருமூர்த்தி மறக்காமல் செய்து வருகிறார். 
அதிமுகவின் தோல்விக்கு 4 முக்கிய காரணங்களை குருமூர்த்தி முன்வைக்கிறார். அதில் முக்கியமானவை, அதிமுகவின் ஊழல், ஒற்றுமையின்மை. இதை சரி செய்து,மீண்டும் 2021 ஆம்  ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டுமாம்.

gurumurthy

இந்த உபநிடதங்களை அருளியுள்ளார் குருமூர்த்தி. நல்லவேளை ஊழலிருந்து தப்பிக்க யாகம் எதுவும் நடத்த சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் போட்டி போட்டுக்கொண்டு இந்த ‘மன்னர்கள்’ செய்தாலும் செய்வார்கள். அது சரி, இந்த குருமூர்த்தி தொடர்ந்து ‘இம்போட்டன்சியல்’ என்றும் அமைச்சரவைக்காக காத்துக்கிடக்கிறார்கள் என்றும் கடுமையாக அதிமுகவை விமர்சிக்கிறார். ஆனால் இந்த அரசாங்கமே 2021 ஆம் ஆண்டும் தொடரவேண்டும் என்று கூறுவதன் ரகசியம் என்ன? ஒரு ஊழல் ஆட்சியே தொடரவேண்டும் என்று கூறுவதன் உள்நோக்கம் என்ன? இந்த ‘இம்போட்டன்சியல்’அரசாங்கமே தொடரவேண்டும் என்று ஆசைப்படுவதன் ரகசியம் என்ன? இதைவிட  சிறந்த அடிமைகள் நமக்கு சிக்கமாட்டார்கள் என்பது தான் குருமூர்த்தியின் நம்பிக்கை.

vanni

‘எவ்வளவு அடித்தாலும் அடி விழுகாதது போல சிரித்துக்கொண்டே, எதுவும் நடக்காதது போல’ செயல்படுகிற ஓபிஎஸ், ஈபிஎஸ் போல  இனி யாராவது குருமூர்த்தி வகையறாக்களுக்கு கிடைப்பார்களா? தங்களுடைய சனாதனக்கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட அதிமுக போல, எந்த கட்சியும் இனி கிடைக்காது. அதனால் தான், திமுகவை, அதிமுகவுக்கு வலிமையான பகை சக்தி என்று நினைவு படுத்தி அந்த பகைக்குள் தங்களுடைய ‘சனாதன அரசியலை’ நிறுவ முயற்சிக்கிறார்.

eps ops

அதிமுகவை போல திமுகவையோ ஏனைய கட்சிகளையோ கையாள முடியாது என்பதால் தான் எவ்வளவு மோசமான ஊழல் கட்சியாக, மக்கள் விரோத கட்சியாக அதிமுக இருந்தாலும் பரவாயில்லை, தூக்கி நிறுத்துவோம் என்று குருமூர்த்தி  செயல்பட்டு வருகிறார். குருமூர்த்தி என்ன இனி மோடியே நினைத்தாலும் தமிழர் நாட்டில் பாஜகவின் செயல்திட்டம் வெற்றி பெறாது’ என்று தெரிவித்திருக்கிறார்.