மோடியும், அமித் ஷாவும் நாட்டின் எதிர்காலத்தை சிதைத்து விட்டனர்! காங்கிரஸ் இளவரசர் பகிரங்க குற்றச்சாட்டு…

 

மோடியும், அமித் ஷாவும் நாட்டின் எதிர்காலத்தை சிதைத்து விட்டனர்! காங்கிரஸ் இளவரசர் பகிரங்க குற்றச்சாட்டு…

மோடியும், அமித் ஷாவும் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்து விட்டனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதராகவும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. மேலும் அந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரையும் திரட்டி காங்கிரஸ் தலைவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல்வேறு கூட்டங்களை பா.ஜ.க. நடத்தி வருகிறது.

மோடி

இந்த சூழ்நிலையில் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமித் ஷாவும் சிதைத்து விட்டதாக ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், அன்பான இந்திய இளைஞர்களே, மோடியும், அமித் ஷாவும் உங்களது எதிர்காலத்தை சிதைத்து விட்டனர்.

அமித் ஷா

வேலை வாய்ப்புகள் இல்லாதது மற்றும் பொருளாதாரத்தில் அவர்கள் ஏற்படுத்திய சேதாரம் ஆகியவற்றால் உங்களுக்குள் ஏற்பட்ட கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆகையால் நமது அன்புக்குரியவர்களை  பிரிக்கின்றனர் மற்றும் வெறுப்புக்கு பின்னால் மறைந்து கொள்கின்றனர். ஒவ்வொரு இந்தியரையும் அன்போடு நோக்குவதன் மூலமே அவர்களை நம்மால் தோற்கடிக்க முடியும் என பதிவு செய்து இருந்தார்.