மோடியும் அமித்ஷாவும் மனிதர்களே கிடையாது தெரிதுமா? சிவ்ராஜ் சிங் திடுக் தகவல்!.

 

மோடியும் அமித்ஷாவும் மனிதர்களே கிடையாது தெரிதுமா? சிவ்ராஜ் சிங் திடுக் தகவல்!.

முன்னாள் மத்திய பிரதேச முதல்வராக இருந்தவத் சிவ்ராஜ் சின்ஹ் செளஹான். கடந்த தேர்தலில் ஆட்சியைக் கோட்டை விட்டதும் பிஜேபியில் அவரது செல்வாக்கு குறைந்துவிட்டது. அவரும் என்னென்னவோ பேசிப்பார்கிறார், செய்து பார்க்கிறார், எதுவும் எடுபட மறுக்கிறது

முன்னாள் மத்திய பிரதேச முதல்வராக இருந்தவத் சிவ்ராஜ் சின்ஹ் செளஹான். கடந்த தேர்தலில் ஆட்சியைக் கோட்டை விட்டதும் பிஜேபியில் அவரது செல்வாக்கு குறைந்துவிட்டது. அவரும் என்னென்னவோ பேசிப்பார்கிறார், செய்து பார்க்கிறார், எதுவும் எடுபட மறுக்கிறது. இப்போது குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளா மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சி.ஏ.ஏ வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து இருக்கின்றன.

modi-and-amit-shah

கேரளமாநிலம் இன்னும் ஒருபடி மேலே போய் இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.இது குறித்து வெள்ளியன்று போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சிவ்ராஜ் சிங் செளகான்,”குடியுரிமைச் சட்டத்தை வாபஸ் பெறவைக்க எந்தச் சக்தியாலும் முடியாது.மோடி, அச்சம் என்பதையே அறியாத சிங்கம், அவர் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவார் ” என்றார்.
அதன் பிறகும் அவர் மனம் குளிரும் அளவுக்கு கைதட்டல் விழவில்லையோ என்னவோ, இன்னும் ஒருபடி மேலே போய், மோடிதான் இந்த தேசத்தைக் காக்கவந்த ஸ்ரீராமபிரான், அமித்ஷாதான் ராமபக்த அனுமான் என்று சொல்லி கைதட்டல்களை அள்ளிவிட்டார். இனி இதைத்தாண்டி சிந்திக்க வேண்டுமே என்கிற கவலையில் இருக்கிறார்களாம் மார்க்கெட் போன மற்ற பிஜேபி தலைகள்.