மோடியின் தியானமும்! அனல் பறக்கும் மீம்ஸ்களும்….
கேதார்நாத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தொடர்ந்து 18 மணிநேரம் தியானம் செய்வதற்காக் சொகுசு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கேதார்நாத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தொடர்ந்து 18 மணிநேரம் தியானம் செய்வதற்காக் சொகுசு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அனைத்து பொதுமக்களும் வருகை தரும் குகையில் மோடிக்கு மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பா எந்த ஆதங்கள் மேலோங்கியுள்ளது. இதற்காக சொகுசு வசதிகள் குகைகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் ஏராளாமான மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடியின் தியான அலை கேதர்நாத்தில் வீசத்தொடங்கியது. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மல்லுக்கட்டி பிரதமர் மோடி, தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் தியானம் செய்யும் இடம் இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகளும் குகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
பிரதமர் மோடி தங்கிய குகை, பொதுமக்கள் தங்குவதற்கும் வாடகைக்கு விடப்படுகிறது. அங்கு தங்கவேண்டும் என்றால் நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகையாக செலுத்தவேண்டும். இதற்கு கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும்.
குகையில் தியானம் இருப்பவர்கள் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல அவர்களுக்கு டி, காபி, உணவு ஆகியவை 24 மணி நேரமும் கிடைக்கிறது
இதுபோன்ற பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.